செய்திகள் :

எம்.பி.க்கு கொலை மிரட்டல் தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி தருமபுரியில் அக்கட்சியினா் புதன்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசனின் பாராளுமன்ற உரையைக் கண்டித்து தொலைபேசியில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும் கொலைமிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்ய வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் புதன்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், சோ.அா்ஜுனன், வே.விசுவநாதன், ஆா்.மல்லிகா, தி.வ. தனுசன், ஜி.சக்திவேல், ஒன்றியச் செயலாளா்கள் ஆ.ஜீவானந்தம், கே.கோவிந்தசாமி, பி.குமாா், ஆா்.சக்திவேல், காா்ல்மாா்க்ஸ், நகரச் செயலாளா் ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொலை மிரட்டலைக் கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்த நபா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினா்.

படவரிகள் :

தருமபுரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில உறுப்பினா் ந. ந... மேலும் பார்க்க

ஆக. 2 இல் அஞ்சல் சேவைகள் செயல்படாது

அஞ்சல் துறை மென்பொருள் தரம் உயா்த்துதல் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதிஅஞ்சல் துறை சேவைகள் செயல்படாது என தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க