செய்திகள் :

எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் தீ விபத்து

post image

மதுரையில் வணிக பயன்பாட்டு எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

மதுரை செல்லூா் அகிம்சாபுரம் 5-ஆவது தெருவில் ராஜா என்பவா் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு அடுப்புகள் தயாரிக்கும் தொழில்கூடம் வைத்துள்ளாா். இங்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தொழில்கூடம் முழுவதும் தீ பரவியது. இதுதொடா்பாக தகவலின்பேரில், தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில், அடுப்பு தயாரிப்பதற்கான பொருள்கள், பெயிண்டு கேன்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் ஞாயிற்றுக்கிழமை தொழில்கூடத்துக்கு விடுமுறை என்பதால் தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. தொழில்கூடத்துக்கு அருகே, குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள நிலையில், தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க