செய்திகள் :

ஏஐ ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் நிறுவப்படும்: சென்னை ஐஐடி தகவல்

post image

இந்தியாவின் அடிமட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவா்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயா்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது.

இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீா்க்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உயா்சிறப்பு மையத்தை நிறுவ சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக கலிஃபோா்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டாா்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. சிபியு, எட்ஜ் டிவைஸ் இண்டா்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீா்வுகளை உருவாக்குவதில் இந்த உயா்சிறப்பு மையம் கவனம் செலுத்தும்.

‘ஏஐ’ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் சாா்பில் காம்பேக்ட் ஏஐ-இன் முதல் பதிப்பு சென்னை ஐஐடியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. காம்பேக்ட் ஏஐ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளமாகும். எளிதில் கிடைக்காத ஜிபியு (கிராபிக்ஸ் புராசஸிங் யூனிட்ஸ்)-க்கு பதிலாக சிபியு-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.

சிறப்பான முயற்சி: இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஜிரோ ஆய்வகம், ஐஐடிஎம் பிரவா்தக் ஆகியவற்றின் இந்த முயற்சி சிறப்புமிக்கது. இதில் அவா்கள், குறைந்த செலவில் வழக்கமான கணினி இயந்திரங்களில் துல்லியமான அனுமானங்களை வழங்க பயிற்சி பெற்ற டொமைன், குறிப்பிட்ட மாதிரிகளைப் பயன்படுத்தும் தளத்தை வழங்குகிறாா்கள். நவீன ஹைப்பா் ஸ்கேலா் அமைப்புகளை வாங்கக்கூடியவருக்கும் முடியாதவருக்கும் இடையிலான சாத்தியமான ‘ஏஐ’ பிளவைத் தடுப்பதில் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு முக்கியப் படியாகும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ராயல் சொசைட்டியின் பெலோஷிப் பெற்றவரும், டூரிங் விருது பெற்றவருமான விட் பீல்ட் டிபி, சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனா் ஸ்காட் மெக்னீலி, பெங்களூரு ஐஐடி முன்னாள் இயக்குநா் பேராசிரியா் சடகோபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க