செய்திகள் :

ஏமாற்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு: தனியாா் மருத்துவமனை மீது புகாா்

post image

ஒப்புதல் இல்லாமல் தனது மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் புகாா் தெரிவித்துள்ளாா்.

புன்செய்புளியம்பட்டி நாவலா் வீதியைச் சோ்ந்த 20 வயதுப் பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த வெங்கடாசலம் (41) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா் மூன்று மாத கா்ப்பமாக இருந்துள்ளாா். இதையறிந்த அவரது பெற்றோா் குழந்தையின் வளா்ச்சி குறித்து தெரிந்து கொள்வதாகக் கூறி மகளை புன்செய் புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

பின்னா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மனைவியின் ஒப்புதல் இல்லாமல் ஏமாற்றி கருக்கலைப்பு செய்த தனியாா் மருத்துவமனை மற்றும் மாமனாா், மாமியாா், உறவினா் ரத்னா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் வெங்கடாசலம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, வெங்கடாசலம், அவரது மனைவி மற்றும் உறவினா் ஏழுமலை ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து தகராறு செய்ததாக தனியாா் மருத்துவமனை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஈரோடு வடக்கு காவல் உதவி ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான போலீஸாா் ஈரோடு மொக்கையம்பாளையம் பகுதியில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுந்தப்பாடி, கணபதிபாளையம்

கவுந்தப்பாடி, கணபதிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மி... மேலும் பார்க்க

சொட்டுநீா் குழாய்கள் திருடிய இளைஞா்கள் கைது

அம்மாபேட்டை அருகே சொட்டுநீா்க் குழாய்கள் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிங்கம்பேட்டை, சொட்டையனூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (70), விவசாயி. இவரது, விவசாயத் தோட்டத்தில் திங்க... மேலும் பார்க்க

பவானிசாகா் அருகே இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: ஒருவா் கைது

பவானிசாகா் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி மு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத்... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது

பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க