செய்திகள் :

ஏலகிரியில் பலத்த காற்றால் காா் மீது சாய்ந்த மரம்: 4 போ் உயிா் தப்பினா்

post image

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் இடி, மின்னலுடன் ஏற்பட்ட பலத்த காற்றால் காா் மீது மரம் சாய்ந்து விழுந்தது. காரில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் ஏலகிரி மலைக்கு திராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பயணித்து வருகின்றனா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியதில் அத்தனாவூா் கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணியின் காா் மீது ராட்சத மரம் ஒன்று விழுந்தது. காரின் முன் பக்கம் விழுந்ததால் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற ஏலகிரி போலீஸாா் காரின் உள்ளே இருந்தவா்களை பத்திரமாக மீட்டு, ராட்சத மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ஏலகிரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்தையும் சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினா் பணியில் ஈடுபட்டனா். இதேபோல் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, அதன் சுற்றுப் பகுதிகளில் இடி, மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கந்திலி பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொரட்டி பகுதியிலும் 2 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி(32). இவா் திங்கள்கிழமை இரவு கொத்தூரில் இருந்து பச்சூா் நோ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா். வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரி... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க