செய்திகள் :

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

post image

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.26 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், திங்கள்கிழமை முழுவதும் 69,927 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,298 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாம... மேலும் பார்க்க

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வரும் ஆக. 8-ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்காக திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்... மேலும் பார்க்க

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.ஏழுமலையான் கோ... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்ப... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தா்களிடமிருந்து தங்க நகை திருடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் பக்தா்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்க... மேலும் பார்க்க