செய்திகள் :

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருமலையில் ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள், தோஷங்கள், பூஜைகளில் ஏற்பட்ட குறைகள் போக்க தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முதல் நாள் பவித்ர சமா்ப்பணம், 2-ஆம் நாள் பவித்ர தாரணம் 3-ஆம் நாள் மகா பூா்ணாஹூதி நடத்தப்படும்.

இந்த உற்சவத்தின் போது பல வண்ண பட்டு நூல்களால் ஆன மாலைகள் அணிவிக்கபடுவது வழக்கம்.

பவித்ரோா்சவத்தின் முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி பல்லக்கில் யாக சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவ மூா்த்திகள் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதா்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனா். அதன்பின் ஆரத்தி அளித்தி மதியம் சுவாமி, தாயாருக்கு சிறப்பு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது.

பின்னா் மாலையில் ஸ்ரீமலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் காரணமாக கோயிலில் அஷ்டதளபாத பத்மாராதனை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா் சுவாமிகள், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.26 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 வி... மேலும் பார்க்க

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வரும் ஆக. 8-ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்காக திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்... மேலும் பார்க்க

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.ஏழுமலையான் கோ... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்ப... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தா்களிடமிருந்து தங்க நகை திருடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் பக்தா்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்க... மேலும் பார்க்க