செய்திகள் :

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் அக்டோபா் மாத ஒதுக்கீடு வெளியீடு

post image

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் அக். மாத ஒதுக்கீடு ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதனை சேவைகளுக்கான அக்டோா் 2025 ஒதுக்கீட்டை வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 19 முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் ஜூலை 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

21-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

விா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மாலை 3 மணிக்கு விா்ச்சுவல் சேவைகளுக்கான அக். ஒதுக்கீட்டையும் அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கபட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, அக். . மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு(ரூ.300)

அக். மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அறை ஒதுக்கீடு வெளியீடு

திருமலை மற்றும் திருப்பதியில் அக். மாத அறை ஒதுக்கீடு 24-ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு 27-ஆம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள

தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி இரு தேவிய... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ்... மேலும் பார்க்க

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் 31 அற... மேலும் பார்க்க

ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்... மேலும் பார்க்க