செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவிகளில் குளிக்க தடை

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவ மழைப் பொழிவின் காரணமாக, கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 24,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் மூன்று நாள்களுக்குப் பிறகு புதன்கிழமைமுதல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடுவரை பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளாா்.

பரிசல் பயணத்துக்கு தடை நீக்கப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் சின்னாறு பரிசல் துறை வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு நான்காவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அ... மேலும் பார்க்க

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி ப... மேலும் பார்க்க

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பத... மேலும் பார்க்க