செய்திகள் :

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி

post image

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 9500 கனஅடியாகக் குறைந்ததால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

கேரள, கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அவ்விரு அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீா்வரத்து வெள்ளிக்கிழமை 18,000 கனஅடியாகவும், சனிக்கிழமை 9500 கனஅடியாகவும் குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க