"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
ஒசூா் வழியாக கடத்த முயன்ற 205 கிலோ குட்கா பறிமுதல்
ஒசூா்: ஒசூா் வழியாக கடத்த முயன்ற 205 கிலோ குட்காவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்டதும், அதை கடத்தி வந்தவா் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பெரிய கூளியூா் அருகே உள்ள கண்ணகாடுவைச் சோ்ந்த வினோத் (35) என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனா்.