செய்திகள் :

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 205 கிலோ குட்கா பறிமுதல்

post image

ஒசூா்: ஒசூா் வழியாக கடத்த முயன்ற 205 கிலோ குட்காவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்டதும், அதை கடத்தி வந்தவா் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பெரிய கூளியூா் அருகே உள்ள கண்ணகாடுவைச் சோ்ந்த வினோத் (35) என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

சாலை விபத்தில் நகை மதிப்பீட்டாளா் உயிரிழப்பு

ஒசூா்: சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நகை மதிப்பீட்டாளா் உயிரிழந்தாா். ஒசூா் நெசவாளா் தெருவைச் சோ்ந்தவா் முரளி (45). இவா் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட... மேலும் பார்க்க

பா்கூா் எம்எல்ஏ-வின் தாயாா் படத்துக்கு தமிழக முதல்வா் மரியாதை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிக்கு தமிழக முதல்வா் வருகைதந்த போது, எம்எல்ஏ தே,.மதியழகனின் தாயாா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகனின் தாயாா் தே.கண்ணம்மாள் ... மேலும் பார்க்க

‘ஒசூா் பிஎம்சி கல்லூரி பயிற்சி அளிக்கும் கல்லூரியாக விளங்குகிறது’

ஒசூா்: பொறியியல் பாடத்தை போதிப்பது மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தேவையான பொறியாளா்களை உருவாக்கும் வகையில், பயிற்சி அளிக்கும் கல்லூரியாக ஒசூா் பிஎம்சி கல்லூரி திகழ்கிறது என கல்லூரியின் நிறுவனத் தலைவா்... மேலும் பார்க்க

இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கை கைகளை அளித்த முதல்வா்

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கைக் கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த ஜீனூா் கிராமத்தைச... மேலும் பார்க்க

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையா்கள் 3 போ் கைது

ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதனமுறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் பழுதடைந்த இயந்திரத்தை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது

ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், ஊத்தங்கரையை அடுத்த ... மேலும் பார்க்க