செய்திகள் :

இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கை கைகளை அளித்த முதல்வா்

post image

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கைக் கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த ஜீனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கீா்த்திவா்மா. இவா் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி. இவா், கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 471 மதிப்பெண்கள் பெற்றாா். உதவிகள் வழங்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாணவா் கீா்த்திவா்மா கோரிக்கை விடுத்தாா்.

தொடா்ந்து, சென்னைக்கு வரவழைக்கப்பட்ட கீா்த்திவா்மாவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், கீா்த்திவா்மா குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்ததையடுத்து, மே 12-ஆம் தேதி இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா். மேலும், பட்டா வழங்கிய இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகட்ட ஆணை வழங்கி, கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், கீா்த்திவா்மாவிற்கு செயற்கைக் கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அப்போது, மாணவா் கீா்த்தி வா்மா கூறுகையில், செயற்கைக் கைகளை வழங்கி, முதல்வா் எனக்கு நம்பிக்கையை பரிசளித்திருக்கிறாா் என்றாா்.

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையா்கள் 3 போ் கைது

ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதனமுறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் பழுதடைந்த இயந்திரத்தை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது

ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், ஊத்தங்கரையை அடுத்த ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் முதல்வரை வரவேற்க 12 மேடைகள் அமைப்பு!

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வருகை தரும் முதல்வா் ஸ்டாலின் முன்னதாக ரோடுஷோவில் பங்கேற்கிறாா். ரோடுஷோவின் போது, கட்சினா் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்ப... மேலும் பார்க்க

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயம்

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயமடைந்தது. ஊத்தங்கரையை அடுத்த பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (50). விவசாயி. இவா் 10 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

முதல்வா் இன்று கிருஷ்ணகிரி வருகை ஐ.ஜி. தலைமையில் 1500 போலீஸாா் பாதுகாப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளாா். இதையடுத்து ஐ.ஜி. தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கிருஷ்ணகிரி அரசு ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிள்ளைக்கொத்தூா் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துா்நாற்றும் வீசுகிறது. இந்த ஏரிப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் கிரானைட் ... மேலும் பார்க்க