செய்திகள் :

ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் வெடிவிபத்து: 9 தொழிலாளர்கள் காயம்

post image

ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள டாடா ஸ்டீல் கலிங்கநகர் ஆலையின் எஃகு உருக்கும் பட்டறையில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 9 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

மேலும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அதேசமயம் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் டாடா ஸ்டீல் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நாடு தழுவிய வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் காங். புறக்கணிப்பு?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நாளை(மார்ச் 22) முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: இதுவரை 105 பேர் கைது, 3 புதிய வழக்குகள் பதிவு!

நாக்பூர் வன்முறை சம்பவத்தில் இதுவரை 105 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என ஹிந்து அமைப்... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை: மத்திய அமைச்சகம் தகவல்

நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் மட்டும் 17,647 குற்றவியல் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 18.3 ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதைச் சார்ந்த மும்மொழ... மேலும் பார்க்க

திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை திருப்பதி கோயிலில் ஹிந்து மதத்தினர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் பிறந்தநாளையொட்டி, திரு... மேலும் பார்க்க