செய்திகள் :

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை காய்கறிகளின் விலை உயா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் காய்கறிகளில் சுமாா் 70 சதவீத காய்கறிகளை கேரளா வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவு, கோயில் விழாக்கள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால், தற்போது காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு காய்கறிகளை கொள்முதல் செய்தனா்.

இதனால் புதன்கிழமை அவரைக்காய், பீன்ஸ், பச்சை மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்தது.

கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய், தற்போது ரூ.35-க்கும், ரூ.60-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ.180-க்கும், ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் ரூ.150-க்கும், ரூ.15-க்கு விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய், ரூ.75-க்கும் விற்பனையானது.

வரும் நாள்களில் மேலும் விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க