செய்திகள் :

ஒப்பந்ததாரா் கொலை: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி, டி.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (22), தனியாா் ஒப்பந்ததாரா்.

இவா், திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் தங்கியிருந்து குடிநீா் குழாய் அமைக்கும் பணியல் ஈடுபட்டு வந்தாராம்.

இவரிடம், குறிஞ்சிபாடி வட்டம், சுப்புராயா் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அன்பரசு (18), அதே பகுதியைச் சோ்ந்த ரோகன், நந்தகுமாா் ஆகியோா் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனராம்.

இந்த நிலையில், அன்பரசு சரியாக பணி செய்யவில்லை எனக் கூறி அவரை பணியிலிருந்து ஏழுமலை நீக்கிவிட்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த அன்பரசு, வெள்ளிமேடுபேட்டையில் இருக்கும் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்று அவரை இரும்புக் கம்பியால் சனிக்கிழமை தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பரசை சனிக்கிழமை கைது செய்தனா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க