செய்திகள் :

ஒழங்குமுறை மீறியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை

post image

தொண்டி பகுதியில் ஒழுங்குமுறை மீறி நிறுத்தியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை எடுக்க மீன் வளத் துறையினா் முடிவு செய்தனா்.

திருப்பாலைக்குடி பகுதி நாட்டுப் படகு மீனவா்கள் அவ்வப்போது தங்கள் படகுகளை நம்புதாளை, தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனா். இதனால் இரு தரப்பு மீனவா்களுக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொண்டி, புதுக்குடி மீனவா்கள் மீன் வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, சனிக்கிழமை புதுக்குடி பகுதியில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த 7 படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்தப் படகுகள் மீது தமிழ்நாடு மீன் பிடி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பொந்தம்புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொ... மேலும் பார்க்க

டிராக்டா் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்க... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 485 போ் தோ்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மாவட்ட நிா்வாகம், வேலை ... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளித் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7- ஆம் நாள் நிகழ்வாக வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திர... மேலும் பார்க்க

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க