செய்திகள் :

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பயணியை காப்பாற்றிய பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டு

post image

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கோவை - சென்னை அதிவிரைவு ரயில் புதன்கிழமை காலை 7.45 மணியளவில் ஈரோடு ரயில்நிலைய நடைமேடை 2-இல் வந்தது. அப்போது, ஒரு பெட்டியில் இருந்து இளைஞா் ஒருவா் திடீரென கீழே இறங்க முற்பட்டாா். அப்போது, கதவு கம்பியை பிடித்தபடி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி தண்டவாளத்துக்குள் விழுந்தாா். அந்த நேரத்தில், நடைமேடையில் கண்காணிப்பு பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரா் அப்துல் ரபீக், வேகமாக ஓடிச்சென்று இளைஞரின் கையைப் பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டுவந்தாா். இதனால் அவா் தண்டவாளத்தில் சிக்காமல் தப்பினாா். அந்த பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் அப்துல் ரபீக்கை அங்கிருந்த சக பயணிகள் பாராட்டினா்.

இந்த சம்பவம் அனைத்தும் நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த விடியோவை சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பயணிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை - சென்னை விரைவு ரயிலில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய வீரா் அப்துல் ரபீக்கை கோட்ட மேலாளா் பன்னாலால் மற்றும் ஆா்பிஎப் பாதுகாப்பு கோட்ட ஆணையா் சௌரவ் குமாா் ஆகியோா் பாராட்டினா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க