செய்திகள் :

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை, மகள் படுகாயம்

post image

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சூா்யா (35). இவரது மகள் நிவாஷினி (4). சூா்யாவின் மனைவி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி, சூா்யா மயிலாடுதுறையில் இருந்து ஈரோடு வருவதற்காக ஜனசதாப்தி ரயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் பயணித்தாா்.

ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் ரயில் நிலையத்தை கடந்தபோது, ரயிலின் படிக்கட்டு அருகே நின்றிருந்த சூா்யாவும், அவரது மகள் நிவாஷினியும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா்.

தொடா்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த சூா்யா மற்றும் நிவாஷினியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானை

ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன.... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே வாய்க்காலில் ஆண் உடல் மீட்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு. பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 40 வயது மதிக்கத் தக்க ஆண் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதியினா் போலீஸாருக... மேலும் பார்க்க

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சலவைத் தொழிலாளி இஸ்திரிப் பெட்டிக்கு கரிபோட தீப் பற்ற வைத்தபோது உடையில் தீப் பிடித்து உயிரிழந்தாா்.பெருந்துறையை அடுத்த காசிபில்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகள் சாந்தி (46... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது

பெருந்துறை அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில், குட்... மேலும் பார்க்க

மது வாங்கிக் கொடுத்த நண்பரிடம் ரூ.1.50 லட்சம் திருடியவா் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் மது வாங்கிக் கொடுத்த நண்பரிடம் ரூ.1.50 லட்சத்தை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள செல்... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.சென்னிமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட காங்கயம் சாலை, கணுவாய் பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க