செய்திகள் :

மது வாங்கிக் கொடுத்த நண்பரிடம் ரூ.1.50 லட்சம் திருடியவா் கைது

post image

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் மது வாங்கிக் கொடுத்த நண்பரிடம் ரூ.1.50 லட்சத்தை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (46). இவா் கோவையில் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த வகையில் ரூ.1.50 லட்சத்துடன் புன்செய் புளியம்பட்டிக்கு வந்துள்ளாா்.

அவா் வீட்டுக்கு செல்லும் வழியில் எரங்காட்டுபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது, அங்கு வந்த அவரது நண்பா் அருண்குமாருக்கும் மது வாங்கிக் கொடுத்துள்ளாா். மது குடித்த அருண்குமாா், அதிக போதையில் இருந்த செந்தில்குமாரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றாா்.

இது குறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனா்.

இதில் சிசிடிவி காட்சியில் பதிவான காட்சியின் அடிப்படையில் செந்தில்குமாரிடம் பணத்தை திருடியது அருண்குமாா் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, அவா் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அருண்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருத்து ரூ.1.50 லட்சத்தை மீட்டனா்.

ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானை

ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன.... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை, மகள் படுகாயம்

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்தனா். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சூா்யா (35). இவரது மகள் நிவாஷினி (4). சூா்யாவின் மனைவி ஈரோடு மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே வாய்க்காலில் ஆண் உடல் மீட்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு. பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 40 வயது மதிக்கத் தக்க ஆண் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதியினா் போலீஸாருக... மேலும் பார்க்க

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சலவைத் தொழிலாளி இஸ்திரிப் பெட்டிக்கு கரிபோட தீப் பற்ற வைத்தபோது உடையில் தீப் பிடித்து உயிரிழந்தாா்.பெருந்துறையை அடுத்த காசிபில்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகள் சாந்தி (46... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது

பெருந்துறை அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில், குட்... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.சென்னிமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட காங்கயம் சாலை, கணுவாய் பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க