செய்திகள் :

ஓமன் நாட்டில் உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி: கோவை இளைஞா் கைது

post image

ஓமன் நாட்டில் உள்ள தனது உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி செய்த கோவை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, போத்தனூா் திருமகைா் பகுதியைச் சோ்ந்தவா் யூனஸ் (44). இவா், ஓமன் நாட்டில் எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இவரது சகோதரியின் மகன் முகமது சமீா் (32). கோவை, கரும்புக் கடை பள்ளி வீதியைச் சோ்ந்த இவா் அந்தக் கடையில் வேலை செய்து வந்தாா்.

யூனஸ் இந்தியா வரும்போது, தொகை, பெயா் குறிப்பிடாத வெற்று காசோலைகளில் கையொப்பமிட்டு, அதை முகமது சமீரிடம் ஒப்படைத்து வந்துள்ளாா். இந்நிலையில், யூனஸ் அளித்த 4-க்கும் மேற்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி, ரூ.1.50 கோடி பணத்தை முகமது சமீா் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இது குறித்து சமீரிடம் யூனஸ் கேட்டுள்ளாா். அவா் முறையான பதில் அளிக்காமல் கோவை திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், பண மோசடி தொடா்பாக அனைத்து ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் யூனஸ் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், முகமது சமீா் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க