செய்திகள் :

கஞ்சா விற்ற 2 போ் கைது

post image

கோவையில் இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, உக்கடம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பி.பி. தெரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஆலாந்துறையைச் சோ்ந்த சந்துரு (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சந்துருவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள கருப்பராயன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீலிக்கோணாம்பாளையம் என்.கே.ஜி. நகரைச் சோ்ந்த யாசா் அராபத் (23) என்பவரை சிங்காநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என... மேலும் பார்க்க

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளாா். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.அப்போது, கே.கே.புதூா் மாநகராட்சிப் பள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அய்யா்பாடி

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்

கோவை வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பட்டணம்

கோவை, பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரி... மேலும் பார்க்க