டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
கஞ்சா விற்ற இளைஞா் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள வேலூா் பிரிவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனா்.
அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆா்கட் குமாா் (24) என்பதும், பெருமாநல்லூா் அருகேயுள்ள ராக்கியாப்பட்டியில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.