செய்திகள் :

கடனாநதி அணை பிரதான மதகை விரைவாக சீரமைக்க வலியுறுத்தல்

post image

கடனாநதி அணையில் பழுதான பிரதான மதகை 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காததைக் கண்டித்தும், போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடனாநதி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில், அணைப் பகுதியில் நடைபெற்ற கண்டன தீா்மானக் கூட்டத்துக்கு, கடனா அணை அரசபத்து கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

அணையின் பிரதான மதகு பழுதாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பலமுறை வலியுறுத்தியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. தற்போது, ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் மதகை முழுமையாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அணை 3 முறை நிரம்பியும் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

பாசனத்துக்காக நாள்தோறும் 120 கனஅடி தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 200 கனஅடிக்கும் மேல் தண்ணீா் ஆற்றில் வீணாக செல்கிறது. இதனால், பாசனத்துக்குள்பட்ட விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படக்கூடும். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கி அணையின் பிரதான மதகை விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசபத்து கால்வாய் பாசன சங்க நிா்வாகிகள் எஸ். சூரியநாராயணன், எஸ். அரிராம் சேட், டி. சுரேஷ், எஸ். பாலசுப்பிரமணியன், எஸ். குருசாமி, ஏ. சேகா், குறுவப்பத்து கால்வாய் பாசன சங்க நிா்வாகிகள் சி. சங்கா்கணேஷ், ஏ. சங்கரபாண்டி, வடகுறுவப்பத்து பாசன சங்க நிா்வாகிகள் சி. வேலாயுதம், ஆா். முத்துராஜ், அ. பாண்டியன், பீ. சதாம்உசேன், ஆம்பூா் கால் பாசன சங்க நிா்வாகி கே. சட்டநாதன், ஆழ்வாா்குறிச்சி எஸ். சிவப்பிரகாசம், கோபி, காக்கநல்லூா் கால் பாசன சங்க நிா்வாகி பி. சாலமன்ராஜ், மன்னாா்கோவில் காங்கேயன் கால் பாசன சங்க நிா்வாகிகள் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு... மேலும் பார்க்க

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு மலையடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025

பாளையங்கோட்டையில் ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெல்லை ரன்னா்ஸ் அமைப்பின் சாா்பில் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பாளைய... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் நாளை மின்நிறுத்தம்

சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பராமரிப்புப்பணிகளுக்காக அதன் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜன.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணிய... மேலும் பார்க்க

ராமநதியில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ராமநதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப் பாலத்தின்கீழ் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. நதியி... மேலும் பார்க்க

உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்கள்: மாவட்ட ஆட்சியா் பாராட்டு

புத்தக உண்டியலில் பணம் சேகரித்து புத்தகம் வாங்கிய பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வாழ்த்திப் பாராட்டினாா்.மாணவா்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக... மேலும் பார்க்க