செய்திகள் :

கடம்பூா் சாலையில் நடமாடும் காட்டு யானைகள்

post image

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் தீவனம் தேடி சாலையில் திரியும் காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம், குன்றி, கோ்மாளம் செல்வதற்கு மலைப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.

தற்போது கோடைக் காலம் என்பதால் வனப் பகுதியில் வனக்குட்டைகள் வடு காணப்படுகின்றன. இதனால் யானைகள் குடிநீா், தீவனம் தேடி சாலையோரம் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வியாழக்கிழமை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறுகிய சாலை என்பதால் பேருந்து, வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் சிலா் யானையை கடந்து சென்றனா்.

இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினா் யானையை காட்டுக்குள் விரட்டியபிறகு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனா். யானைகள் சாலையோரம் இருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க