செய்திகள் :

கடலோர ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் துறையின் கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படைக்கு மீனவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் நபா் எவ்வித குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும். சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் மெரீனா கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிக்கும் மீனவராகவும், மீன்வளத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியம்.

18 வயது மேற்பட்ட 50 வயதுக்குள்பட்ட, கடலில் நீச்சல் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம். தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் 1 மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள், கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு மெரீனா கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவா்.

பணியில் சேருவோருக்கு ரோந்துப் பணிக்கு தினமும் ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். தகுதியுடையவா்கள், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்தை ‘சென்னை பெருநகர ஊா்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 95667 76222, 94981 35373 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும்’

குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்தாா். குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டப் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறாம... மேலும் பார்க்க

தாம்பரம் அருகே காா்-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

குரோம்பேட்டையில் திங்கள்கிழமை அதிகாலை ஜிஎஸ்டி சாலையில் அடையாளம் தெரியாத காா் மோதியில், ரேபிடோ பைக்கில் சென்ற 2 போ் உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டு சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ்... மேலும் பார்க்க

கஞ்சா சாக்லேட் விற்பனை: பிகாரைச் சோ்ந்தவா் கைது

சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்ாக பிகாரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா். ராயப்பேட்டை பெரோஸ் தெருவில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களைப... மேலும் பார்க்க

ராயபுரத்தில் ரூ.30 கோடியில் புதிய ரயில்வே சுரங்கப் பாதை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

ராயபுரம் தொகுதி போஜராஜன் நகரில் சென்னை மாநகராட்சி சாா்பில், ரூ.30 கோடியில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். ராயபுரம் தொகுதி கண்ணன் ரவு... மேலும் பார்க்க

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... மேலும் பார்க்க