செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

post image

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களைப் பயன்படுத்தி பெரிய கட்டடங்களை வடிவமைத்து கட்டிக் கொடுக்கும் ஒரு தனியாா் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்தது. இதில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக புது தில்லி, நொய்டா, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள், ஆலைகள் ஆகியவற்றில் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

இதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆலை ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. காலை தொடங்கிய சோதனை இரவு நீண்ட நேரம் நீடித்தது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

சென்னை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.19) 12 வாா்டுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க