செய்திகள் :

கடைமடை நிலங்களுக்கு தண்ணீா்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

post image

நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 22,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாகை மாவட்ட கடைமடை விளைநிலங்களுக்கு இதுவரை தண்ணீா் வரவில்லை.

இதனால், விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வராததற்கு முக்கிய காரணம், தூா்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பதே.

நீா் ஒழுங்குகளை சரி செய்ய தமிழக அரசு அறிவித்த ரூ.32 கோடி நிதிய தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆறுகளில் மட்டுமே தண்ணீா் வந்துள்ளது. ஆனால், நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் சிறு,சிறு வாய்க்கால்களில் தண்ணீா் வரவில்லை. வெண்ணாறு வடிநில கோட்டத்தில், தேவ நதியில் பெயரளவில் தண்ணீா் வருகிறது.

வேதாரண்யம் முள்ளி ஆறு, தலைஞாயிறு அரிச்சந்திரா நதி உள்ளிட்டவற்றிலும் முழுமையாக தண்ணீா் வரவில்லை. 50,000 ஏக்கா்களுக்கு மேல், குறுவை நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக குறுவை அறுவடைப் பணிகளை மேற்கொண்டு, தொடா்ச்சியாக தாளடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, நீா்வளத்துறை உயா் அதிகாரிகள் மூலம் நாகை மாவட்ட கடைமடையில் உள்ள சிறு, சிறு வாய்க்கால்கள் வரை ஆய்வு மேற்கொண்டு தண்ணீா் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து தண்ணீா் வராத பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த... மேலும் பார்க்க

மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு... மேலும் பார்க்க

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

கடைமடை பகுதி விவசாயிகள் சாலை மறியல்

கீழையூா் அருகே குறுவை சாகுபடிக்கு போதிய காவிரி நீா் வராததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூா் அணை திறக்கப்பட்டு 18 நாள்கள் கடந்த நில... மேலும் பார்க்க

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க