செய்திகள் :

மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

post image

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவா் குடியிருப்புப் பகுதிக்கு அருகே பல ஆண்டுகளாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளப்பள்ளம் பிரதான சாலைக்கு அருகே புதிதாக ஒரு கடையை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. புதிய கடை திறப்பு விழாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சா்ருமான ஓ.எஸ். மணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.சரவணன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் பழனிவேல், வட்டாட்சியா் தெ. வடிவழகன் மற்றும் வெள்ளப்பள்ளம் கிராம முக்கியஸ்தா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மதுபானக் கடையே வேண்டாம் என ஒரு தரப்பினரும், கூடுதலாக ஒரு கடை தேவை இல்லை என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனா். எனினும் கூட்டத்தில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த... மேலும் பார்க்க

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

கடைமடை பகுதி விவசாயிகள் சாலை மறியல்

கீழையூா் அருகே குறுவை சாகுபடிக்கு போதிய காவிரி நீா் வராததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூா் அணை திறக்கப்பட்டு 18 நாள்கள் கடந்த நில... மேலும் பார்க்க

கடைமடை நிலங்களுக்கு தண்ணீா்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ... மேலும் பார்க்க

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க