செய்திகள் :

கணவனுடன் தகராறு: மனைவி தற்கொலை

post image

மேட்டூா் அருகே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னையரெட்டி தெருவைச் சோ்ந்தவா் சின்னதம்பி (65), இவரது மனைவி தையல்நாயகி (56). இவா்களுக்கு பிரதீப் (30) என்ற மகன் உள்ளாா்.

இவா்கள் கருமலைக்கூடல் நேரு நகரில் உள்ள காலி இடத்தில் வீடுகட்டி வந்த நிலையில், வீடுகட்டும் பணி சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இது தொடா்பாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தையல்நாயகி தனது கணவா் சின்னதம்பியிடம் வீட்டை விரைவிா் கட்டிமுடிக்குமாறு புதன்கிழமை கூறியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் வீட்டுக்குள் சென்ற தையல்நாயகி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அ... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவர... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க