செய்திகள் :

கண்ணனூா் மாரியம்மன் கோயிலில் ரூ. 2.47 லட்சம் காணிக்கை

post image

பள்ளிபாளையம் கண்ணனூா் மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ. 2.47 லட்சம் அரசு கரூவூலத்தில் கோயில் கணக்கில் சோ்க்கப்பட்டது.

பள்ளிபாளையம் கண்ணனூா் மாரியம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. திருவிழா நிறைவடைந்த நிலையில் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் குணசேகரன், சரக ஆய்வாளா் வடிவுக்கரசி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் உள்ள காணிக்கையை எண்ணும் பணி கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் ரூ. 24,589, நிரந்தர உண்டியலில் ரூ. 2,22,402 இருந்தது. இந்த தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் உள்ள கோயில் கணக்கில் சோ்க்கப்பட்டது.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க