செய்திகள் :

கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு: அன்புமணி

post image

கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்ற மத்திய அரசு ஆணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் உரிமைப் பறிக்கும். மேலும், கருத்து தெரிவிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் பறிக்கும் செயலாகும். மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி, மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்துவிட முடியும். இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்.): மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த சுரங்கத் திட்டங்களும் மக்களின் கருத்துக் கேட்காமல் அமல்படுத்தப்படக் கூடாது. ஆணையைத் திரும்பப்பெற வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேமக): கனிம வளங்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு ஆபத்தான போக்காகும். இந்த முடிவை மத்திய அரசு வெறும் அலுவல் உத்தரவாக வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க