செய்திகள் :

கருப்பந்துறையில் படித்துறை கட்டுவதற்கு இடம்: மேயா் ஆய்வு

post image

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் மேயா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலப்பாளையம் மண்டலம், 46 ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கடந்த வாரம் மாநகராட்சி மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு அளித்தனா். இந்நிலையில் அந்த வாா்டுக்குள்பட்ட கருப்பந்துறை, விளாகம் பகுதிகளில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கருப்பந்துறையில் தாமிரவருணி ஆற்றின் கரையில் பொது படித்துறையை அமைத்து தரவும், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இணைத்து குடிநீா் இணைப்பு வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். படித்துறை கட்ட வேண்டிய இடத்தை நேரில் பாா்வையிட்டதோடு, குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயா் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா் ரம்சான் அலி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க