செய்திகள் :

கரும்பு லாரியின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

post image

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தாளவாடி மலைப் பகுதி கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே

வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதனால் லாரி ஓட்டுநா் அச்சமடைந்து லாரியை நிறுத்தினாா்.

சாலையில் காட்டு யானை நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நின்றன. காட்டு யானை, லாரியின் அருகே சென்று தும்பிக்கையால் கரும்புகளை இழுத்து சுவைத்தது. அப்போது யானை தனது காலை லாரியின் மீது வைத்ததில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

கரும்புகளைத் தின்ற யானை சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது.

இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

கொடுமுடி அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தென்னந்தோப்பு சேதம்

கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன. கொடுமுடி அருகே ஊஞ்சலூா் தெற்கு தெருவில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில்... மேலும் பார்க்க

ஆடுகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன. தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க