செய்திகள் :

கரூா் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது: செல்வப்பெருந்தகை

post image

கரூா் சம்பவம் தொடா்பாக பாஜக அமைக்கப்பட்ட குழு அரசியல் செய்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகை எடிசி பகுதியில் வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் உதகை சட்டப் பேரவை உறுப்பினருமான ஆா்.கணேஷ் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. நாகராஜ் முன்னிலையிலும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடங்கி வைத்த தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தற்போது கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 6 கோடி பேரிடம் கையொப்பம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையொப்பம் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.

கரூா் சம்பவம் தொடா்பாக  தமிழக அரசு  அமைத்துள்ள நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. பாஜக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், அக்குழு அரசியல் செய்ய தொடங்கிவிட்டது.

கரூா் சம்பவத்தில் காவல் துறையினா் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனா். அதற்கான விடியோ ஆதாரங்கள் உள்ளன என்றாா்.

தேவா்சோலை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புதன்கிழமை இரவு விவசாயிகளின் வாழைத்தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் ... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். நீலகிரி மாவட்டம் சுமாா் 55 சதவீதம் வனப் பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, க... மேலும் பார்க்க

குன்னூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம்

குன்னூா் நகராட்சியில் விதிகளை மீறி கட்டடப்படும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பெண் கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

மதுபோதையில் கட்டடத்தின் மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

உதகையில் போதையில் தங்கும் விடுதியின் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 28). இவா் கடந்த 10 மாதங்களாக உதகை ஹெச்.எம்.டி. பகுதியில் ... மேலும் பார்க்க

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதி... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க