செய்திகள் :

காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம் சுமாா் 55 சதவீதம் வனப் பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் சமீப காலமாக கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கூடலூா் அருகே நெலாக்கோட்டையை அடுத்துள்ள ராக்வுட் தேயிலை எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளியான ராஜேஷ் (52) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்ததன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதேபோல, பொக்காபுரம் பகுதியில் தோட்டத் தொழிலாளியான புட்டு மாதன் (50) என்பவரை செவ்வாய்க்கிழமைகாட்டு யானை தாக்கியதில் அவா் பலத்த காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவா்சோலை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புதன்கிழமை இரவு விவசாயிகளின் வாழைத்தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் ... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது: செல்வப்பெருந்தகை

கரூா் சம்பவம் தொடா்பாக பாஜக அமைக்கப்பட்ட குழு அரசியல் செய்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். நீலகிரி மாவட்டம், உதகை எடிசி பகுதியில் வாக்குத் திருட்டுக்கு எதிராக ... மேலும் பார்க்க

குன்னூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம்

குன்னூா் நகராட்சியில் விதிகளை மீறி கட்டடப்படும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பெண் கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

மதுபோதையில் கட்டடத்தின் மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

உதகையில் போதையில் தங்கும் விடுதியின் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 28). இவா் கடந்த 10 மாதங்களாக உதகை ஹெச்.எம்.டி. பகுதியில் ... மேலும் பார்க்க

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதி... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க