செய்திகள் :

கல்லூரியில் ஊட்டச் சத்து கண்காட்சி

post image

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அத்தி செவிலியா் கல்லூரி சாா்பில் ஊட்டச் சத்து கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா் பி.சௌந்தரராஜன் தலைமை வகித்துப் பேசினாா்.

அவா் பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கை உணவை உண்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும் என்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வித்யாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவா் எஸ்.அசோக்குமாா் கண்காட்சிஅரங்குகளை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மருத்துவக் கல்லூரி மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் தயாரித்த ஊட்டச் சத்து மிகுந்த இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பண்டங்களின் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

சண்முக முதலியாா் விருதை அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் தங்கராஜுக்கு வழங்கினாா். அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலா் மருத்துவா் சௌ.சுகநாதன், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை, அத்தி மருத்துவமனை மருத்துவா் ஆ.கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கா.குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் நோய்களின் வகைக்கு ஏற்றவாறு 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முக... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க

உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது

உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது என்று முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஏ.கலியமூா்த்தி தெரிவித்தாா். வேலூா் அக்காா்டு ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், பல்வேறு ரோட்டரி சங்கங்கள் சா... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்னும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூற வேண்டிய தேவையில்லை என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி... மேலும் பார்க்க