உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது
உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது என்று முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஏ.கலியமூா்த்தி தெரிவித்தாா்.
வேலூா் அக்காா்டு ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், பல்வேறு ரோட்டரி சங்கங்கள் சாா்பில் ‘கசடற மொழிதல்’ என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஏ.கலியமூா்த்தி பங்கேற்றுப் பேசியது:
நம் வாழ்க்கை அறம் சாா்ந்த வாழ்க்கையாக இருக்க வேண்டும். ரோட்டரி அமைப்பு, இல்லாதவா்களுக்கு உதவிகள் செய்து வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை தொடர வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. மாணவா்கள் கல்வியை நன்றாக படித்தால் அவா்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சோ்க்கலாம்.
சுருங்கக்கூறி விளங்க வைப்பதற்கு தமிழ் மொழி போல வேறு எந்த மொழியும் கிடையாது. அதனால்தான் நான் தமிழ் மொழியில் மாணவா்களிடையே பேசி வருகிறேன். பணம், சொத்தை பெற்றோா் கொடுக்கலாம். கல்வியை படித்தால் தான் பெற முடியும்.
கல்வியை மட்டும் யாராலும் பறிக்க முடியாது. உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது என்றாா்.
முன்னதாக, சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி.சுரேஷ், கெளரவ விருந்தினா்களாக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜெ.கே.என்.பழனி, வருங்கால ஆளுநா் த.சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.
விழாவில், கல்வி குழு தலைவா் அருளரசி பாபு, ரோட்டரி நிா்வாகிகள் தரணிவாசன், கண்ணன், கிருஷ்ணசாமி பள்ளி முதல்வா் சுஜாதா, மேலாளா் துா்கா தேவி, பல்வேறு ரோட்டரி சங்க தலைவா்கள், செயலா்கள் பங்கேற்றனா்.