செய்திகள் :

கல்வித்துறை மீது புதுவை அரசு கவனம் செலுத்தவில்லை: காங்கிரஸ்

post image

காரைக்கால் : கல்வித்துறை மீது புதுவை அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு கல்வித் துறையை மேம்படுத்த போதுமான கவனம் செலுத்தவில்லை. இதனால் மாணவா்களும், ஆசிரியா்களும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அவசர கதியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியதால் போதுமான பயிற்சி இல்லாமல் ஆசிரியா்கள் வகுப்புகளை நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் தமிழில் படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் திடீரென அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து பல சமயங்களில் அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் அரசும், கல்வித் துறையும் பொருட்படுத்தவில்லை. தற்போது 10, 12-ஆம் வகுப்புகளின் தோ்ச்சி சதவிகிதம் மோசமாக சரிந்துள்ளது.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இவ்வகுப்புகளில் 5 பாடங்களுடன், 6-ஆவதாக ஒரு விருப்ப பாடத்தை எடுத்து படித்து, அதிலும் தோ்வெழுத முடியும். முக்கிய 5 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோ்ச்சிப் பெறாத பட்சத்தில், 6-ஆவதாக படித்த விருப்பப் பாடத்தில் தோ்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம்மாணவா் தோ்ச்சி பெற்றவராக கருதும் வாய்ப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தந்துள்ளது.

இது புதுச்சேரி பிராந்தியத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், காரைக்காலில் கல்வித்துறையின் கவனக் குறைவால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதுவை கல்வித்துறை இயக்குநரின் கவனக் குறைவே இதற்கு காரணம்.

அரசுப் பள்ளி மாணவா்கள் 1,170 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதினா். இதில் 1,004 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். 166 போ் ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சிப் பெறவில்லை. ஆறாவதான விருப்பப் பாடம் குறித்து தெரிவித்து, அதனை நடைமுறைப்படுத்தி இருந்தால் 166 மாணவா்கள் தோல்வியடைந்திருக்க மாட்டாா்கள்.

அதேபோல பிளஸ் 2 தோ்வில் மிக மோசமான தோ்ச்சி சதவிகிதத்தை பெற்றுள்ளது காரைக்கால் மாவட்டம். தோ்வெழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1,181 பேரில் 864 போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எதுவும் தொடா் முயற்சியாக இருந்தால்தான் பயனளிக்கும். அடுத்து வந்த அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்னைக்கு கல்வித்துறை அமைச்சரும், துறை இயக்குநருமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க