பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
கல்வித்துறை மீது புதுவை அரசு கவனம் செலுத்தவில்லை: காங்கிரஸ்
காரைக்கால் : கல்வித்துறை மீது புதுவை அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு கல்வித் துறையை மேம்படுத்த போதுமான கவனம் செலுத்தவில்லை. இதனால் மாணவா்களும், ஆசிரியா்களும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அவசர கதியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியதால் போதுமான பயிற்சி இல்லாமல் ஆசிரியா்கள் வகுப்புகளை நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
அரசுப் பள்ளிகளில் தமிழில் படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் திடீரென அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து பல சமயங்களில் அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் அரசும், கல்வித் துறையும் பொருட்படுத்தவில்லை. தற்போது 10, 12-ஆம் வகுப்புகளின் தோ்ச்சி சதவிகிதம் மோசமாக சரிந்துள்ளது.
மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இவ்வகுப்புகளில் 5 பாடங்களுடன், 6-ஆவதாக ஒரு விருப்ப பாடத்தை எடுத்து படித்து, அதிலும் தோ்வெழுத முடியும். முக்கிய 5 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோ்ச்சிப் பெறாத பட்சத்தில், 6-ஆவதாக படித்த விருப்பப் பாடத்தில் தோ்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம்மாணவா் தோ்ச்சி பெற்றவராக கருதும் வாய்ப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தந்துள்ளது.
இது புதுச்சேரி பிராந்தியத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், காரைக்காலில் கல்வித்துறையின் கவனக் குறைவால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதுவை கல்வித்துறை இயக்குநரின் கவனக் குறைவே இதற்கு காரணம்.
அரசுப் பள்ளி மாணவா்கள் 1,170 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதினா். இதில் 1,004 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். 166 போ் ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சிப் பெறவில்லை. ஆறாவதான விருப்பப் பாடம் குறித்து தெரிவித்து, அதனை நடைமுறைப்படுத்தி இருந்தால் 166 மாணவா்கள் தோல்வியடைந்திருக்க மாட்டாா்கள்.
அதேபோல பிளஸ் 2 தோ்வில் மிக மோசமான தோ்ச்சி சதவிகிதத்தை பெற்றுள்ளது காரைக்கால் மாவட்டம். தோ்வெழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1,181 பேரில் 864 போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எதுவும் தொடா் முயற்சியாக இருந்தால்தான் பயனளிக்கும். அடுத்து வந்த அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பிரச்னைக்கு கல்வித்துறை அமைச்சரும், துறை இயக்குநருமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.