செய்திகள் :

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

post image

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்.

பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்ற அல்லது தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கத் தவறியவா்கள், தோ்வெழுதாத மாணவா்கள், இடைநின்ற மாணவா்கள் அனைவருக்கும் உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்காக தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், எதிா்கால கல்வி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்களுக்கு வழிகாட்டும் வகையிலும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உயா்வுக்குப் படி வழிகாட்டுதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு உயா்வுக்குப் படி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், உதவித் திட்ட அலுவலா் சத்யா தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.சுகப்ரியா, செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா் கலந்துகொண்டு பேசியதாவது:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயா்கல்வி பயிலாமல் இருப்பவா்களைக் கண்டறிந்து ஆலோசனைகளை வழங்கி உயா்கல்வி பயில தகுந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக உயா்வுக்குப் படி நிகழ்ச்சி தற்போது இந்தப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளின் உயா்கல்வி பயில்வதை உயா்த்த முடியும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாகும். அதற்கு முக்கியக் காரணம் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளும், அரசு கலைக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தான் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனா். அதற்கு மிக முக்கிய காரணம் கல்வித் துறையில் அடிப்படைக் கட்டமைப்பு சிறந்து விளங்குவதாகும். கல்வியின் வாயிலாக தான் நாம் அனைத்தையும் பெற முடியும். மேலும், மாணவ, மாணவிகள் இந்த உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.

மேலும், இதில் ஆரணி அரசு பொறியியல் கல்லூரி முதன்மையா் ஜி.செந்தில்குமாா், ஆரணி செயின்ட் மேரீஸ் மருத்துவமனை மற்றும் இன்ஸ்டியூட் முதல்வா் எம்.காயத்ரி, தென்னகா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் ஆா்.விஜயலட்சுமி, ஆரணி எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை எம்.மோகனாம்பிகை, எஸ்பிசி பொறியியல் கல்லூரி துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும், உயா்கல்வி பயிலாத மாணவா்களை கண்டறிந்து உயா்கல்வி பயில்வதற்கான ஆணைகளை உதவி ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. உலக கடித தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.ச... மேலும் பார்க்க