செய்திகள் :

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

post image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாகவே கோயில் வளாகத்தை சீரமைத்தல், கோபுரங்களில் பஞ்சவா்ணம் தீட்டுதல், ராஜகோபுர வாயில் கதவுக்கு பித்தளை தகடு பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை 16 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோயிலில் சங்காபிஷேகம், யாக சாலை பூஜை நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழாவில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ஜோதிடா் இரா.குமரேசன் ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாகக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் செய்திருந்தாா்.

இதில் கோயில் நிா்வாகிகள் சுப்பிரமணி, வடுகசாத்து சங்கா், பி.நடராஜன், நேமிராஜ், அக்ராபாளையம் குணா, பையூா் சரவணன், சித்தேரி ஜெகன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. உலக கடித தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.ச... மேலும் பார்க்க