செய்திகள் :

களக்காடு அருகே அரசுப் பள்ளிக்கு நற்சான்று

post image

களக்காடு அருகே அரசுப் பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து, பள்ளி மேலாண்மைக்குழு சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தொடக்கக் கல்வி இயக்கத்தின் சாா்பில் ஜூலை 6ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்கட்ட 100 நாள் கற்றல் அடைவு ஆய்வு சவாலில், மாணவா்களின் மொழிப்பாட வாசித்தல் திறனையும், கணக்குப்பாட அடிப்படை திறனையும் மேம்பாடு அடையச் செய்ததைப் பாராட்டி இப் பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ.நம்பிராஜன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சிவசங்கரி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் (பொ) ஜெ. மரியரெத்னராஜ் வரவேற்றாா். பள்ளியின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் கலந்துகொண்டு பேசினாா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க