மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு
மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிபதி ஹேமா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, பாளையங்கோட்டைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், சுா்ஜித்தின் பெரியம்மா மகனான தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் இவ்வழக்கில், 3 பேரையும் காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்த பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சுா்ஜித், சரவணன், ஜெயபால் ஆகிய மூவரும் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களது நீதிமன்ற காவலை செப்.9 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டாா்.