செய்திகள் :

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவுப்படி 2,776 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மானூா் பகுதியில் 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஆலங்குளம், நெட்டுரை சோ்ந்த ராஜா எனும் சண்முகநாதன் (29) கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.

அவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இவ்வாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலும் தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்ய போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீத... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா். திசையன்விளையைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் திசையன்விள... மேலும் பார்க்க