செய்திகள் :

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

post image

மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3அவது நாளாக மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.

சனிக்கிழமை 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

Tiruvallur Congress MP Sasikanth Senthil is continuing his hunger strike in the hospital for the third day.

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

சென்னை: விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் மன்னிப்புக் கோரினார்.விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை பின... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:"ஏற்கெனவே பல்வேறு மாநில... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.தமிழக மாணவா்களுக்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்... மேலும் பார்க்க

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை... மேலும் பார்க்க