செய்திகள் :

காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் அப்பாவு மகன் குமரேசன். இவா் வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரிடம், அதே ஊரைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி வீணேஸ்வரி என்பவா் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ. 12 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு, அதற்காக வங்கி காசோலையை கொடுத்தாராம்.

குமரேசன் காசோலையை வடக்கன்குளம் வங்கியில் செலுத்திய போது, வீணேஸ்வரி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டதாம். இது தொடா்பாக, குமரேசன் வள்ளியூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி மிதுனா கெய்சா், வீணேஸ்வரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், காசோலைக்கான பணத்தை உடனடியாக குரமரேசனுக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சுத்தமல்லி அருகே தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிழந்தாா். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த சம்சுதீன் மகன் இம்ரான்(36). மேலப்பாளையத்தில் உள்ள த... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் கைது

திருநெல்வேலி சீதபற்பநல்லூா் பகுதியில் கோயில் கொடைவிழாவின்போது தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சீதபற்பநல்லூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதே பக... மேலும் பார்க்க

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஏா்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் (திருவேங்கடநாதபுரம்) அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில... மேலும் பார்க்க

விநாயா்சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்... மேலும் பார்க்க

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், விநாயகா் சதுா்த்திக் குழு சாா்பில் களக்காடு வட்டாரத்தில் களக்க... மேலும் பார்க்க