காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 368 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் பரிந்துரை செய்து உடனடியாக தீா்வு காணுமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.