செய்திகள் :

குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது: காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

காஞ்சிபுரம்: தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரை பாதுகாப்பானது என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமராஜா் வீதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிப் பேசியது..

ஆகஸ்ட் 2015 முதல் தேசிய குடற்புழு நீக்க நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான 2-ஆவது சுற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று வழங்கப்படுகிறது. இதில் விடுபட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வரும் 18 -ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மற்றும் தனியாா் பள்ளிகள்,கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கா்ப்பிணிகளும், தாய்மாா்களும் தவிா்த்து குடற்புழு நீக்க மாத்திரையானது அனைவருக்கும் பாதுகாப்பானது.

அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகள் இந்த மாத்திரையை உட்கொண்டாா்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்வுக்கு எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட சுகாதார அலுவலா்த.ரா.செந்தில், மாநகராட்சி ஆணையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா்,ஆசிரியா்கள், மாணவியா்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் கல்நது கொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி

காஞ்சிபுரம்: பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரி... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் சிமென்ட் சாலை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட இளமை நகரில் ரூ.12 லட்சத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலையை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் கல... மேலும் பார்க்க

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா். காஞ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுத... மேலும் பார்க்க