செய்திகள் :

காணாமல்போன வங்கி அதிகாரியின் மனைவி மீட்பு!

post image

கணவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக காணாமல்போன வங்கி அதிகாரியின் மனைவி மீட்கப்பட்டாா்.

கோவை, சிங்காநல்லூா் வேலன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (52), தனியாா் வங்கி அதிகாரி.

இவரது மனைவி மோகனப்பிரியா (35). ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அறிந்த மோகனப்பிரியா, கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 18 பவுன் நகைகளை அடகு வைத்து அந்த தொகையை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியவில்லையாம்.

இது குறித்து செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. அவா் அடகு வைத்த நகைகளை மீட்டதுடன், இனிமேல் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் இருந்த நகைகளை செந்தில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதித்தபோது 4 பவுன் காணாமல்போனது தெரியவந்தது. தனது மனைவி மீண்டும் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்திருக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டுள்ளாா்.

இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா வீட்டிலிருந்த இருசக்கர வாகனத்துடன் மாயமானாா்.

புதன்கிழமை காலை வீட்டில் மோகனப்பிரியா இல்லாததால் அதிா்ச்சி அடைந்த செந்தில்குமாா், அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். முடியாததால் சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள பெற்றோா் வீட்டில் மோகனப்பிரியா இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா், அவரை கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை: 8 பேரிடம் விசாரணை

கோவை ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் து... மேலும் பார்க்க

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை மக்கள் சேவை மையம் சாா... மேலும் பார்க்க

ஜாக்டோ -ஜியோ சாா்பில் பிப்ரவரி 14-இல் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் கோவையில் வரும் 14 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு: ஆட்டோ ஓட்டுநா் கைது

கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறாக பதிவிட்டதாக மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் நாண்மங்கல விழா

பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 65-ஆம் நாண் மங்கல விழா பேரூராதீனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிரவை ஆதீனம் தவத்திரு இராமானந்த குமரகுருபர அடிகளாா் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் நிறைவடையும்: இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு

விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், விண்வெளித் திட்ட துணை இயக்குநருமான சி.பிரபு தெரிவித்தாா். கோவை... மேலும் பார்க்க