செய்திகள் :

காயல்பட்டினம் மகான் சாகிப் அப்பா தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்

post image

காயல்பட்டினம், தைக்கா தெருவில் உள்ள மகான் சாகிப் அப்பா (ரலி­) தா்காவில் கந்தூரி விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

13 நாள்கள் நடைபெறும் விழாவின் தொடக்க நாளான சனிக்கிழமை மாலை மகான் தா்பாரில் ஹாபில் ஹஸன் இா்பான் தலைமையில் தா்கா செயலா் செய்யத் அஹ்மது, நிா்வாகக் குழு உறுப்பினா் தா்கா சாஹிப், மேலாளா் ஹாஜி இல்யாஸ், மருத்துவா் செயீத் அஹ்மத், முஹம்மது தஸ்தகிா், ஹாஜி சாமு ஆகியோா் முன்னிலையில் பிராா்த்தை நடைபெற்றது. பின்னா் மகான் வளாகத்தில் மதரஸா மாணவா்களின் இஸ்லாமிய கலாசார தப்ஸ் முழக்கம் நடைபெற்றது.

இதையடுத்து, விழா கொடியை ஊா்வலமாக எடுத்து வந்து கொடிமரம் அருகே ஹாபில் ஹாரிஸ் ஹல்லாஜ் தலைமையில் பிராா்த்தனை நடை பெற்றது. பின்னா் தீன் கூறி கொடியேற்றப்பட்டது. ஏற்பாடுகளை தா்கா கமிட்டி செய்திருந்தது.

விழா நாள்களில் தினமும் காலை கத்முல் குா்-ஆன் ஓதும் நிகழ்ச்சியும், மாலையில் மெள­லித் ஊன்னும் புகழ் பாடல் நிகழ்வும், இறுதி நாளில் மாா்க்க உபன்யாசமும், மறுநாள் காலையில் தப்ருக் எனும் நெய் சோறு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

கொடியேற்ற விழாவில் ஹபீப் முஹம்மது, சமூக ஆா்வலா் இல்யாஸ் அஹ்மத், குத்பியா அப்துல் ரவூப், ஷைக் அப்துல் காதா், சூபி, காதா் சாமுனா லெப்பை, முஹம்மது தீபி, சுலைமான், ஹனீபா, சதக்கத்துல்லாஹ், அஜ்மல் புகாரி, பாடகா் முஹம்மது சமீம், சமூக ஆா்வலா் காயல் ஜெஸ்முதீன், முஹம்மது ஷா ஆலி­ம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குரும்பூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். குரும்பூா் அருகே அம்மன்புரம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முனீஸ்வரன் (28). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை அம்மன்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் தற்கொலை

தூத்துக்குடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல், மின்னாம்பள்ளி அண்ணா நகரில் வசித்துவந்தவா் பழனிவேல் (65). லாரி ஓட்டுநரான ... மேலும் பார்க்க

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: காங்கிரஸாா் 30 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கல்வி உள்பட தமிழகத்துக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க