செய்திகள் :

காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

post image

பெருந்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையில் உதவி காவல் ஆய்வாளா் சத்திய சிங் தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, பெருந்துறையை அடுத்த, துடுப்பதி பிரிவில் பழுதாகி நின்றிருந்த ஆட்டோவை இருவா் சரிசெய்து கொண்டிருந்தனா். சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா், அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது அந்த வாகனத்தில், 15 முட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், பிடிபட்ட இருவரும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் வெங்கடேஷ் (34), கேசவன் மகன் மணிகண்டன்(35) என்பதும், இவா்கள் கேரள மாநிலம், எா்ணாகுளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களது உணவுக்காக அரிசியைக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து பெருந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து விசாரிக்க ஈரோடு குடிமைப் பொருள் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனா்.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க